கோவையில் கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாராட்டு

கோவை மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிர்மலா என்ற பெண்ணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவை மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் உள்ள ஒரு சாலையில் ஒருவர் ரூ.50,000 பணத்தை அண்மையில் தவறவிட்டுள்ளார். இந்த பணம் அடங்கிய பண்டில் கேட்பாரின்றி கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த வழியே வந்த நிர்மலா எனும் பெண் இந்த பண்டிலைப் பார்த்துள்ளார். அதில் ரூ.50,000 இருப்பதைக் கண்டதும், அருகில் உள்ள C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்துள்ளார்.

நேர்மையாக செயல்பட்ட நிர்மலாவை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS இன்று (செப்டம்பர் 23) நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவரது நேர்மையான செயலுக்காக சிறப்பு சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார்.

இத்தகைய நேர்மையான செயல்கள் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக அமையும் என்றும், மற்றவர்களும் இதுபோன்ற நேர்மையான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...