கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி சாதனை

கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா பெண்கள் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி ஹஷினி நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.


கோவை: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யாவட்டத்தில் கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக "கேலோ இந்தியா" பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் சப் ஜூனியர், பெண்கள் ஜூனியர், பெண்கள் எலைட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் சார்பாக கோவையைச் சேர்ந்த மாணவி ஹஷினி கலந்து கொண்டார். அவர் கெரின், ஸ்பிரின்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கப் பதக்கமும், டைம் டாயல் மற்றும் பர்சியூட் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.



இந்த வெற்றியுடன் கோவை திரும்பிய ஹஷினியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இளம் வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ள ஹஷினியின் வெற்றி, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்தின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...