கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோபனரி சோதனைச் சாவடியில் தீவிர பரிசோதனை

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கோபனரி எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


கோவை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு-கேரள எல்லையான கோபனரி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.



கோபனாரி காவல் சோதனைச் சாவடியில் காரமடை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவின், செவிலியர் விஜயலட்சுமி, மருந்தாளுனர் ஆண்டனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு மற்றும் சிவராஜ் ஆகியோர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வாகனங்களில் பயணிப்பவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர்.

உடல் நிலையை கண்காணித்து, பின்னரே கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. சுகாதாரத்துறையின் கூற்றுப்படி, இந்த கண்காணிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெறும். நிபா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....