காரமடையில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதைக் கண்டித்து காரமடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியினர் போலீஸ் நடவடிக்கையை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என குற்றம்சாட்டினர்.


கோவை: காரமடை கார் ஸ்டேன்டு பகுதியில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமிழர் தேசம் கட்சியின் மாநில தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க கோவை மாவட்ட அமைப்பாளர் கண்டியூர் முருகேசன் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் கோவை முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே கே எஸ் செல்வகுமார் குற்ற பின்னணி கொண்டவராக காவல்துறையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் சமுதாய தலைவர் மீதும் சமூகப் போராளி மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் துறையினர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசம் கட்சி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி வைத்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவரை குறிவைத்து தற்போது வீட்டில் சோதனை நடத்துவதும், குற்ற வழக்குகளில் அவரது பெயரை சேர்ப்பதும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...