ஜாதி பாகுபாடு: பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கியதாக மாணவியின் தாய் புகார்

கோவை ராசிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ஜாதி பாகுபாடு காட்டி தன் மகளுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக மாணவியின் தாய் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்பவர் தனது மகளுக்கு ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்திராகாந்தியின் மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தனது மகள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், ஆனால் தலைமை ஆசிரியர் ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசையும் தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் அளித்ததாக இந்திராகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.



இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "உனது குழந்தைக்கு பரிசு கொடுத்ததே தவறு" என்று கூறி, தன்னையும் தன் மகளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். ஜாதியின் அடிப்படையில் பரிசளித்தது வேதனை அளிப்பதாக கூறும் இந்திராகாந்தி, தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் இந்திராகாந்தி, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...