வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறு: பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது

வால்பாறையில் சாலையில் வாகனத்தை நிறுத்தி, அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை 7 மணி அளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் சுப்பிரமணி கோவில் அருகே திருப்பூர் பகுதியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மகேந்திரா வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே வழியில் வெல்லமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் மற்றும் நடத்துனரை, குடிபோதையில் இருந்த கார் நிறுத்தியவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.



தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பாஜக கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் முரளிதரன் (35), கொங்கு மண்டல நகர் இளைஞர் அணி தலைவர் துரைமுருகன் (36), கொங்கு மண்டல இளைஞர் அணி துணைத் தலைவர் வெங்கடேஷ் (25), மண்டல இளைஞர் அணி செயலாளர் அருண் (30), கோதண்டம் (46) மற்றும் மண்டல பொதுச் செயலாளர் சசிக்குமார் (42) ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...