வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறு: பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது

வால்பாறையில் சாலையில் வாகனத்தை நிறுத்தி, அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை 7 மணி அளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் சுப்பிரமணி கோவில் அருகே திருப்பூர் பகுதியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மகேந்திரா வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே வழியில் வெல்லமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் மற்றும் நடத்துனரை, குடிபோதையில் இருந்த கார் நிறுத்தியவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.



தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பாஜக கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் முரளிதரன் (35), கொங்கு மண்டல நகர் இளைஞர் அணி தலைவர் துரைமுருகன் (36), கொங்கு மண்டல இளைஞர் அணி துணைத் தலைவர் வெங்கடேஷ் (25), மண்டல இளைஞர் அணி செயலாளர் அருண் (30), கோதண்டம் (46) மற்றும் மண்டல பொதுச் செயலாளர் சசிக்குமார் (42) ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...