கோவை இராமநாதபுரம் பகுதியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் இராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். குடிநீர் திட்டம், வார்டு அலுவலகம், திருமண மண்டபம் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (25.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஆணையாளர் தினசரி களஆய்வு மேற்கொண்டு பணிகளின் முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறார்.



மத்திய மண்டலம், வார்டு எண் 63-க்குட்பட்ட இராமநாதபுரம், அங்கண்ணன் லே-அவுட் பகுதியில் சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.



பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இராமநாதபுரம், இராமலிங்க ஜோதி நகரில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தை புனரமைத்து வார்டு அலுவலகமாக பயன்படுத்தவும்,



நாகப்ப தேவர் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.



இராமநாதபுரம் பிரதான சாலை சந்திப்பில் பாதாள சாக்கடையின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தினார்.



ஒலம்பஸ் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் நடராஜ், சக்திவேல், பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...