கோவை மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சலவைத் தொழில் மேற்கொள்ளும் ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், சமையல் எரிவாயு பயன்படுத்தி இயக்கப்படும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலில் ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள பயனாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...