செந்தில் பாலாஜியின் செயல்களை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்களை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



Coimbatore: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "அமைச்சர்களுக்கு வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம், ஆனால் பொதுமக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் புரிந்து கொள்வதில்லை," என்று கூறினார்.

மேலும், தமிழக முதலமைச்சரின் மறதி குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், "இவ்வளவு சீக்கிரமாக முதலமைச்சருக்கு மறதி ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. இன்று தியாக சுடராக அவரை பார்க்கும் முதலமைச்சர், அன்றைக்கு அவரது ஊருக்கே சென்று அவருடைய வாயால் பேசிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பேசியதை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இந்த மறதி தமிழகத்திற்கு நல்லதில்லை என்பது எங்களது கருத்து," என்றார்.

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், "நிபந்தனைகளை அவர் சரியாக பின்பற்றுகிறாரா என்பதை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு அவருக்கு ஆதரவான நிலையில் இருக்கக்கூடிய சூழலில், அவரும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள சூழலில் அவரின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...