கோவையில் 'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் துவக்கம்

கோவை கிழக்கு மண்டலத்தில் மக்களைத்தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் துவக்கம். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில், "மக்களைத்தேடி மாநகராட்சி" என்ற சிறப்பு முகாமினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு காமராஜர் சாலையில் உள்ள மணிமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில் இந்த முகாம் தொடங்கப்பட்டது. தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த சிறப்பு முகாமில் வருவாய் பிரிவு, பொறியியல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு மற்றும் நகரமைப்புப் பிரிவு சார்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில் சொத்துவரி மாற்றம், குடிநீர் இணைப்பு, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி போன்ற சேவைகள் அடங்கும்.



இந்த முகாம் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் என ஐந்து மண்டலங்களிலும் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநகராட்சியின் சேவைகளைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



முகாமின் முதல் நாளிலேயே பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகளும் வழங்கப்பட்டன. இந்த முயற்சி மாநகராட்சியின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...