தொண்டாமுத்தூரில் புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்திற்கு 9 செண்ட் நிலம் ஒதுக்கீடு

கோவை தொண்டாமுத்தூரில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேளாண் உதவி இயக்குனரிடம் உத்தரவு நகலை வழங்கினார்.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்தில் இந்த 9 செண்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலாராணி, தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தப் புதிய கட்டிடம் அமைவதன் மூலம், அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான சேவைகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...