மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் விடுதலையை கொண்டாடிய திமுகவினர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



காரமடை கிழக்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரமடை அருகே தென் திருப்பதி நால்ரோடு பகுதியில், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம். டி. கல்யாணசுந்தரம் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளேபாளையம் ஊராட்சி நால்ரோடு பகுதியில், ஊராட்சி தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமையிலும், துணைத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



மேட்டுப்பாளையம் நகரில், நகர திமுக சார்பில் நகர செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனூஸ் ஆகியோர் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது.



அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...