கல்லாரில் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவு

மேட்டுப்பாளையம் அருகே கல்லாரில் நான்கு நாட்கள் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவடைந்தன. 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கடந்த நான்கு நாட்களாக தென் மண்டல சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன.

இந்த போட்டிகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்றன. 14, 17, 19 வயதுடையோருக்கென நாக்கவுட் முறையில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 1500க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

14, 17, 19 ஆகிய மூன்று பிரிவுகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்கள் மூன்று வயது பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பெற்று வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றினர். மேலும், 14 வயதுடையோர் பிரிவில் சென்னை ஜே.சி.எஃப் காலணி பள்ளி மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், இரண்டாம் இடத்தை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி பிடித்தது.

இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பத்ரிநாராயணன் மற்றும் கவிஞர் கவிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...