கல்லாரில் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவு

மேட்டுப்பாளையம் அருகே கல்லாரில் நான்கு நாட்கள் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவடைந்தன. 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கடந்த நான்கு நாட்களாக தென் மண்டல சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன.

இந்த போட்டிகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்றன. 14, 17, 19 வயதுடையோருக்கென நாக்கவுட் முறையில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 1500க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

14, 17, 19 ஆகிய மூன்று பிரிவுகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்கள் மூன்று வயது பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பெற்று வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றினர். மேலும், 14 வயதுடையோர் பிரிவில் சென்னை ஜே.சி.எஃப் காலணி பள்ளி மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், இரண்டாம் இடத்தை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி பிடித்தது.

இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பத்ரிநாராயணன் மற்றும் கவிஞர் கவிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...