செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது: வானதி சீனிவாசன் கண்டனம்

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாகக் கருதப்பட்ட செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்ததும் புனிதராக மாறியதாக விமர்சித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.26) அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் இருக்கும்போது ஊழல்வாதியாகக் கருதப்பட்ட செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்ததும் புனிதராகி விட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் தனது பதிவில், "செந்தில் பாலாஜியை நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜாமின் மட்டுமே வழங்கியுள்ளது என்பதை திமுகவினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதையும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இப்போது, "உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது" என வரவேற்றிருப்பது முரண்பாடாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

"ஊழல் குற்றவாளியை, அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்ட ஒருவரை கொண்டாடுவதற்கு வெட்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதால் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது" என்று வானதி சீனிவாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...