பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் - குக் வித் கோமாளி சர்ச்சை குறித்து அறந்தாங்கி நிஷா கருத்து

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவதை கண்டித்த அவர், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார்.



Coimbatore: கோவை காளபட்டி பகுதியில் நடைபெற்ற கே.ஜி.எஃப் கண்காட்சி மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, பெண்களின் முன்னேற்றம் குறித்தும், சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சர்ச்சை குறித்தும் கருத்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய அறந்தாங்கி நிஷா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். "பெரியார் சொன்னது போல, பெண்களிடம் கரண்டியை புடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்து பாருங்கள். இன்று பெண்கள் தான் அதிகம் மேடை ஏறுகின்றனர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஆண்கள் இருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.



குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட போது, அறந்தாங்கி நிஷா, "அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெண்களுக்கு என்ன நடந்தாலும் அந்த இடத்தில் நான் இருப்பேன். ஒரு பெண்ணாக நான் இதை கண்டிக்கிறேன். ஒரு பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம்," என்று தெரிவித்தார்.

தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் பேசிய அவர், "தற்போது சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நல்ல நகைச்சுவை பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சி. சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'வள்ளிமயில்' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படம் வெளியானால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்," என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...