மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மீது டம்ளர் வீச்சு: பரபரப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மீது டம்ளர் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் வெடித்தது. 9 அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் மீது டம்ளர் வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே, நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில்லை, குடிநீர் சரியாக விநியோகம் செய்வதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினர்.



இந்நிலையில், திமுக கவுன்சிலர் நவீன், வருவாய் துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையை ஆக்கிரமித்து நகராட்சி சாலை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஒரு பெண் அதிகாரி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு கவுன்சிலர் திடீரென டம்ளரை எடுத்து நகராட்சி தலைவர் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக திமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் இருக்கை முன்பு திரண்டு அதிமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் உள்ளே அழைக்கப்பட்டு கவுன்சிலர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வின், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி அங்கிருந்து வெளியேறினார். இதனைக் கண்டித்தும், நகராட்சியில் சரிவர பணிகள் மேற்கொள்ளாத நிர்வாகத்தைக் கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நகராட்சி தலைவரை அச்சுறுத்தும் விதமாகவும் கூட்டத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகக் கூறி, அதிமுகவைச் சேர்ந்த 9 நகர்மன்ற உறுப்பினர்களை அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு பங்கேற்காதவாறு தடை விதிப்பதாகவும், அவர்களை இடைநீக்கம் செய்வதாகவும் நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...