கோவையில் கஞ்சா விற்பனை: 71 வயது மூதாட்டி கைது; கஞ்சா சாக்லேட் விற்றவர் மீது குண்டாஸ்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 71 வயது மூதாட்டி கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். கோவில்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்ற நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டதோடு, கோவில்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஊஞ்சவேலம்பட்டி அருகே சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு பெண்ணிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையாவின் மனைவி சந்தாமணி (71) என்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.



இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி 34 கிலோ கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் சமல் (40) கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில், சஞ்சய்குமார் சமல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...