ஆனைமலையில் தொழிலாளி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர் விபத்தில் உயிரிழப்பு

ஆனைமலையில் மில் தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழப்பு. பொள்ளாச்சி அருகே வன உயிரின புகைப்படக் கலைஞர் ஜீப் விபத்தில் பலி. இரு சம்பவங்களிலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


Coimbatore: ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி விபத்துகளில் இரு நபர்கள் உயிரிழந்தனர்.

ஆனைமலை அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்தரசு (60) மனைவி தனலட்சுமி (58), அங்குள்ள மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற அவர், அதிகாலை 2:00 மணிக்கு வெப் கார்டிங் இயந்திரத்தில் வேலை செய்த போது, புடவை மாட்டி வலதுகை முட்டியில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த ரோகித் காளிங்கராயன் (41), விவசாயி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர், சேத்துமடையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ஜீப்பின் பின்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தார். ஓட்டுநர் பிரதீப் ஜீப்பை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதாக தெரிகிறது. வேகத்தடையில் ஜீப் ஏறியபோது ரோகித் காளிங்காராயன் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரு சம்பவங்கள் குறித்தும் ஆனைமலை போலீஸார் நேற்று (செப்.26) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...