பட்டியலினத்தவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திமுகவின் கூட்டணி நடைமுறைகளையும் விமர்சித்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் கூட்டணி நடைமுறைகளை விமர்சித்த வானதி சீனிவாசன், "கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே அச்சம் கொள்ளும் திமுக, கூட்டணி இல்லாமல் வெற்றி பெறவே முடியாத திமுக, கூட்டணி கட்சிகள் தயவில் வெற்றி பெற்றதும், தனித்து ஆட்சி அமைக்கும்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசின் அமைச்சரவையில் பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், 34 பேர் கொண்ட அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு கடைசி இடங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 6 முறைகளிலும் வலுவான கூட்டணி அமைத்துதான் வென்றதாகவும், ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கூட்டணி இல்லாமல் இதுவரை தேர்தலை சந்திக்க கூட துணிவில்லாத திமுக, ஆட்சிக்கு வந்ததும் கூட்டணி கட்சிகளை துச்சமென மதிக்கிறது. கறிவேப்பிலையைப் போல தேர்தலின்போது பயன்படுத்திக் கொண்டு, தேர்தல் முடிந்து ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் தூக்கி வீசி விடுகிறது," என்று வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இறுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்வைத்துள்ள 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற கோரிக்கையை ஆதரித்து, திமுகவின் கூட்டணி நடைமுறைகளில் மாற்றம் தேவை என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...