கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தூய்மை பணியாளர்களுக்கான தாட்கோ திட்ட கடனுதவி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (27.09.2024) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆணையாளர் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கான நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நல வாரிய அட்டை வழங்குதல், ESI, PF வசதிகள் பெறுவதற்கான விபரங்களை பதிவு செய்தல், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக பள்ளியில் பயிலும் தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.3,500 உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.



மேலும், சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வருடம் ரூ.450 பிடித்தம் செய்து, ரூ.2.00 இலட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு கிடைக்க வழிவகை செய்தல், தூய்மைப்பணியாளர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க ஏற்பாடு செய்தல் போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டை பெறுவதன் மூலமாக திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, கை, கால் இழத்தல், பார்வை இழப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை பெற்று பயன்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, செந்தில்குமரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ), கே.மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ராஜேந்திரன், முருகன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...