மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக தலைவரின் கணவரின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மன்றக் கூட்டம் பரபரப்பாக முடிவடைந்தது. திமுகவைச் சேர்ந்த தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, திமுக தலைவர் கலைவாணியின் கணவர் பாலமுரளியின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் பேரூராட்சியில் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் 22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் ரங்கநாதன், தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



பேரூராட்சிப் பகுதியில் சாக்கடைகள் முறையாகத் தூர்வாரப்படுவதில்லை என்றும், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் சுகாதாரச் சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு குறைகளைக் கூறி திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதன் காரணமாக, தேதி குறிப்பிடாமல் இன்று நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...