மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக தலைவரின் கணவரின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மன்றக் கூட்டம் பரபரப்பாக முடிவடைந்தது. திமுகவைச் சேர்ந்த தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, திமுக தலைவர் கலைவாணியின் கணவர் பாலமுரளியின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் பேரூராட்சியில் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் 22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் ரங்கநாதன், தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



பேரூராட்சிப் பகுதியில் சாக்கடைகள் முறையாகத் தூர்வாரப்படுவதில்லை என்றும், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் சுகாதாரச் சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு குறைகளைக் கூறி திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதன் காரணமாக, தேதி குறிப்பிடாமல் இன்று நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...