பத்மஸ்ரீ விருது பெற்ற 110 வயது தேக்கம்பட்டி பாப்பம்மாள் காலமானார்

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். இயற்கை விவசாயத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் பெரியார் விருதும் பெற்றிருந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு 8:30 மணியளவில் காலமானார்.

விவசாயத்தின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் பாட்டி, தனது உயர்ந்த வயதிலும் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது விவசாய ஆர்வத்தைப் பாராட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது.

வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அண்மைக் காலமாக படுக்கையிலேயே இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டி இன்று இரவு காலமானார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் பாட்டியின் மறைவு விவசாய சமூகத்திற்கும், இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...