பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் (110) உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் நேற்று இரவு காலமானார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (110) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் தனது இளம் வயதிலிருந்தே விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்த அவரது ஆர்வத்தைக் கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது 109வது வயதில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது பேத்தி கமலம் மற்றும் மகள் ஜெயசுதா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.

பாப்பம்மாள் இறந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக வந்து அவரது உடலுக்கு காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...