பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் (110) உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் நேற்று இரவு காலமானார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (110) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் தனது இளம் வயதிலிருந்தே விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்த அவரது ஆர்வத்தைக் கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது 109வது வயதில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது பேத்தி கமலம் மற்றும் மகள் ஜெயசுதா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.

பாப்பம்மாள் இறந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக வந்து அவரது உடலுக்கு காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...