வால்பாறையில் கத்தி, அருவாளுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது

வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த இவர்கள் மாணவரிடம் பணம், செல்போனை பறித்துள்ளனர்.



கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் வெற்றிவேல் (18) நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (19), ஆறுமுகம் (25), ஆனந்தராஜ் (19) ஆகிய மூவரும் குடிபோதையில் கத்தி, அருவாளுடன் சென்று மிரட்டி அவரைத் தாக்கி, கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.

இது குறித்து வெற்றிவேல் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர், மூவரையும் தேடிச் சென்றனர். முதலில் ஆறுமுகம் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், ஏ1 எதிரியான ஹரிஹரன் போலீசார் தேடி வருவதை அறிந்து தேயிலைத் தோட்டத்தில் ஓடினார்.



அப்போது கையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்து கிடந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைப்பற்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...