கோவை மாநகராட்சி ஆணையர் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வடக்கு மண்டலத்தில் அவிநாசி சாலை, பீளமேடு, குரும்பர் வீதி பகுதிகளில் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இப்பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.



வார்டு எண் 27-க்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு பேருந்து நிறுத்தம், வி.கே.சாலை, பொரிக்கடை சந்து, குரும்பர் வீதி 1 & 2, அவிநாசி பிரதான சாலை சென்டர் மீடியன் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.



100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.





இப்பணியில் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுதல், தேவையில்லாத பொருட்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல் போன்றவை அடங்கும்.



இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, நாசர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பவுன்ராஜ், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...