கோவை ராமநாதபுரத்தில் பைக் திருட்டு: இருவர் கைது

கோவை ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள் வாகன சோதனையின் போது பிடிபட்டனர்.



கோவை: கோவை நகரில் அதிக விலை கொண்ட இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் இரு நபர்கள் ஒரு வாகனத்தில் வந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.



செப்டம்பர் 27 அன்று ராமநாதபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த நவ்புல் ரஹ்மான் மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சப்வான் என தெரியவந்தது.

மேலும், நவ்புல் ரஹ்மான் காலையில் பிரியாணி கடையில் வேலை பார்த்துவிட்டு இரவில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...