கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமும் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 28 அன்று நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



மாநகராட்சி ஆணையாளர் மாசிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி IAS அவர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.



இந்த முக்கிய நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க. சிவகுமார், நகர்நல அலுவலர் மருத்துவர் கே. பூபதி, உதவி ஆணையர் துரைமுருகன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) கே. மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ரன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...