வால்பாறை சாலையில் கார் விபத்தில் சிக்கிய கொள்ளையன் கைது: திருடிய கார், பணம் மற்றும் நகைகள் மீட்பு

கோவை பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த சாலமன் என்ற உமேஷ் குமார், திருடிய காரில் வால்பாறை செல்லும் வழியில் விபத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார். திருடிய பொருட்கள் மீட்கப்பட்டன.


கோவை: கோவை பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த பிறகு தப்பி ஓடிய கொள்ளையன், வால்பாறை செல்லும் சாலையில் கார் விபத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சாலமன் என்கிற உமேஷ் குமார் (27) என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பீளமேட்டில் வெளியூர் சென்றிருந்த தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு, வாசலில் நிறுத்தி இருந்த காரையும் திருடிக் கொண்டு தப்பினார்.

இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், செப்டம்பர் 28 அன்று வால்பாறை செல்லும் வழியில் ஒரு வளைவில் திரும்பும்போது கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய நபர் பீளமேடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய சாலமன் என்பது தெரியவந்தது.



விபத்தில் சாலமனுக்கு கை முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலமனை கைது செய்தனர். சேதமடைந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாலமனிடமிருந்து மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.1,20,000 ரொக்கப்பணம், மற்றும் 5 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன. காயமடைந்த சாலமன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலமன் மீது உள்ள மற்ற வழக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...