கோவையில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகழாய்வுகள் குறித்த தேசிய மாநாடு

கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகழாய்வுகள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் "தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்" என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல உதவி தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வி.ப. யதீஸ்குமார் "தாமிரபரணி ஆற்றங்கரை தொல்லியல் அகழாய்வுகள்" குறித்து உரையாற்றினார்.

முனைவர் யதீஸ்குமார் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வுகள் பற்றி விரிவாக விளக்கினார். பாண்டியர்களின் பழைய துறைமுகங்களான கொற்கை மற்றும் அழகன்குளம் பற்றியும், தாமிரபரணி நாகரிகத்தின் பழமை குறித்தும் தொல்லியல் ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.



ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும், அவற்றின் காலம் அறிவியல் முறைப்படி கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் அகழ்வாராய்ச்சி களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழைய பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்டனர். மேலும், கல்படுகைகள் உள்ள பகுதிக்கும் சென்று ஆய்வுகளை நேரில் கண்டனர்.

இந்த நிகழ்வை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையமும் வாணவராயர் பவுண்டேஷனும் ஏற்பாடு செய்திருந்தன. கொங்கல்நகரம் களப்பயணத்தை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. ஜெகதீசன் ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...