கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையனிடம் நீதிபதி வாக்குமூலம்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர் ஆசார் அலி, காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி அவரிடம் வாக்குமூலம் பெற்றார்.


Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளையன் ஆசார் அலியிடம் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி வாக்குமூலம் பெற்றார்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர்களில் ஒருவரான ஆசார் அலி, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இந்நிலையில், இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி, குற்றவாளி ஆசார் அலியிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...