இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதைத் தடுக்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி மனு

கோவையில் இந்து மக்கள் கட்சி, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் செயல்களைத் தடுக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்தது. ஹிஸ்புல்லா தலைவர் நசுருல்லாவுக்கு அஞ்சலி செலுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையிலான குழுவினர் ஒரு முக்கிய மனுவை சமர்ப்பித்தனர். இந்த மனுவில், சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாத் இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நசுருல்லாவின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைத்து அஞ்சலி செலுத்த முயற்சிப்பவர்களை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இஸ்ரேல் நாடு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவர் ஹசன் நசுருல்லா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, காசா பகுதியில் பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹமாஸுக்கு எதிரான தாக்குதலிலும் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹவுதி இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தின் மீதும் இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படாமல் இந்த யுத்தம் முடிவுக்கு வராது என்று கூறியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புகளோடு தொடர்பு கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி மற்றும் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் நசுருல்லாவுக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், தமிழக காவல்துறை இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...