கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக 45 வயதான கண்ணன் பழனிசாமிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணன் பழனிசாமி (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், 30.09.2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி கண்ணன் பழனிசாமிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த புலனாய்வு அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் திறம்பட ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் கனிமொழி (WPC 1127) ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...