கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது

அக்டோபர் 27 முதல் கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்குகிறது. கோவை விமான நிலையத்தில் புதிய சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. கோயம்புத்தூர் நெக்ஸ்ட் அமைப்பின் தலைவர் சதீஷ் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கோவையில் இருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கடந்த வாரம் முதல், ஹைதராபாத்துக்கு 26 வாராந்திர சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாழன் மற்றும் சனிக்கிழமை தவிர இண்டிகோவின் தினசரி இயக்கப்படும் 3 விமானங்களுக்கு பதிலாக 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அக்டோபர் 1 முதல் பெங்களூருக்கு 28 வாராந்திர சேவைகளை இண்டிகோ இயக்குகிறது. தினசரி 4 சேவைகள் இருக்கும். மேலும், இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆர் விமானத்துடன் அக்டோபர் 1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவைத் தொடங்குகிறது. அக்டோபர் 27-ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது.

அத்துடன், இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை மாற்றியமைத்துள்ளது. ஆனால் அபுதாபியில் இருந்து விமான அட்டவணை அப்படியே உள்ளது.

கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே அக்டோபர் 27 முதல் தினசரி இடைநில்லா விமானங்கள் இயக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...