காந்தி ஜெயந்தி: கோவையில் நாளை இறைச்சிக் கடைகள் மூடல் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று கோவை மாநகராட்சி எல்லைக்குள் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுவைக்கூடங்கள் மூடப்படும். மீறினால் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2, 2024 அன்று மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் பகுதிகளில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவைக்கூடங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு எதிராக மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார். இதில் அபராதம் விதித்தல், முதல் எச்சரிக்கை வழங்குதல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும்.

காந்தி ஜெயந்தி தினத்தன்று விலங்குகளை வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து இறைச்சி வியாபாரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...