14 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியார் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 2010ல் நடந்த மாமியார் கொலை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாமியார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூரில் மறைந்திருந்த குற்றவாளியை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.

2010 ஆம் ஆண்டு, மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் வசித்து வந்த ராஜன் (45) என்பவர் குடும்பத் தகராறில் தனது மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் (50) ஆகியோரை அரிவாளால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பின் ராஜன் தலைமறைவானார்.



இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜனை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியைக் கைது செய்த மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை சார்பாக டிஎஸ்பி ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...