கோவையில் மிதமான மழை: குளிர்ச்சியான சூழலுடன் போக்குவரத்து நெரிசல்

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்திய அதே வேளையில், சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



கோவை: கோவை மாநகரில் நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் ஒரு புறம் குளிர்ச்சியான சூழல் நிலவியது, மறுபுறம் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.

கடந்த ஒரு வாரமாக காலையில் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் சாரல் மழை ஓரிரு பகுதிகளில் பெய்து வந்தது.



நேற்று பெய்த மழை, வெயிலால் வாடிய மக்களுக்கு குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி மகிழ்ச்சி அளித்தது.



எனினும், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.



இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மழைக்காலத்தில் சாலைகளில் ஏற்படும் வெள்ளநீர் தேக்கத்தை தவிர்க்க, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...