கோவை இடிகரையில் முதன்முறையாக வள்ளி கும்மியுடன் காவடி ஆட்டம்: திரளான மக்கள் கூட்டம்

கோவை இடிகரையில் முதன்முறையாக இடிகரை கிராமிய கலைக்குழுவினர் வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம் நிகழ்த்தினர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.



கோவை: கோவை இடிகரையில் முதன்முதலாக இடிகரை கிராமிய கலைக்குழுவினரின் வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம் அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.

தமிழகத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி கும்மி நடனம் தற்போது பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. கோவை இடிகரையில் இடிகரை கிராமிய கலைக்குழுவினரின் முதல் வள்ளி கும்மி அரங்கேற்று விழா நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்துள்ள இடிகரை கிராமத்தில் இடிகரை கிராமிய கலைக்குழு என்ற பெயரில் பொதுமக்கள் ஒன்றிணைந்து கலைக்குழுவை உருவாக்கினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தாங்களாகவே வள்ளி கும்மி நடனங்கள் ஆடி பயிற்சி எடுத்து வந்தனர்.



இந்த முதல் அரங்கேற்ற விழாவில் வள்ளி கும்மி நடனத்துடன் காவடியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.



முதன் முதலாக வள்ளி கும்மி நடனத்தில் காவடி எடுத்துக்கொண்டு முருகன் பாடல்களுக்கு 60க்கும் மேற்பட்ட 6 வயது முதல் 65 வயது வரையிலான பெண்கள் நடனம் ஆடினர்.

மேலும், கோல் அடித்துக்கொண்டு பெண்கள் நடனம் ஆடியபோது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியை இடிகரை, செங்காளிபாளையம், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துக்கொண்டு கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...