உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு: பென்ஷன் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

உடுமலையில் நடைபெற்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில், பென்ஷன் தொழிலாளர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமான தொழிலாளர் பென்சன் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.



மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, உடுமலை குட்டைத்தடல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கியது.



மாநாட்டில் மாநில செயலாளர் பாஸ்கரன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் பாஸ்கரன், பென்ஷன் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூ.3000 வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.25,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் மற்றும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில குழு உறுப்பினர் அப்பாஸ், தொழிற்சங்க நிர்வாகி பால் நாராயணன், தொழிற்சங்க அமைப்பாளர் சுந்தர்ராஜ், மகளிர் அமைப்பாளர் வைதேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...