கோவையில் சுதந்திர போராட்ட வீரர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் 220வது நினைவுநாள் நிகழ்ச்சி: எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

கோவை வேடப்பட்டி வன்னியம்பாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் 220வது நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



Coimbatore: கோவை வேடப்பட்டி வன்னியம்பாளையம் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் 220வது நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாக்குழுவினர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

1804ல் ஆங்கிலேயரை எதிர்த்து கோவையில் துவங்கி சேலம் வரை ஆயுதப் போராட்டம் நடத்திய புரட்சிப்படை தலைவர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் வீரதீர செயல்களை எஸ்.பி.வேலுமணி நினைவுகூர்ந்தார். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பண்ணாடியார், அவர்களின் வரி விதிப்பை எதிர்த்து போராடியதாக குறிப்பிட்டார்.



திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோருடன் இணைந்து ஒற்றுமையாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் தளபதி இராமசாமி பண்ணாடியார் என்று வேலுமணி புகழாரம் சூட்டினார்.



மேலும், இந்த பகுதியில் 50 ஆண்டுகளாக பட்டா இல்லாத மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பட்டா வாங்கிக் கொடுத்ததையும் வேலுமணி நினைவுகூர்ந்தார். பண்ணாடியாரின் நினைவு நாளைக் கொண்டாடுவதன் மூலம் இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றும், அரசு இராமசாமி பண்ணாடியாருக்கு நினைவு நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் வேலுமணி வலியுறுத்தினார்.



இறுதியாக, தளபதி இராமசாமி பண்ணாடியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...