கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகளிடம் பொது மக்கள் மனுக்களை வழங்கினர். மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பிள்ளையப்பன்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தலைவர் இலட்சுமண மூர்த்தி தலைமையில் ஊராட்சி வரவு செலவுகள் படித்தல், தூய்மை பணியாளர்களை கௌரவித்தல், பால்வினை நோய்கள் குறித்த உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



சூலூர் வட்டம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளுப்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினார்கள். இலட்சுமி நகர் பகுதியில் உள்ள கோரிக்கைகளை இலட்சுமி வினாயகா மக்கள் சேவை சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்தது பாராட்டத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...