தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29, 2024 அன்று கொண்டாடப்பட்டது. வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன் செய் பொறியியல் துறையால் நிறுவப்பட்ட உணவுக்கழகத்தின் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஆண்டின் கருப்பொருள் "உணவு இழப்பு மற்றும் கழிவுகளைக் குறைப்பதற்கான கால நிலை நிதி" என்பதாகும். இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கணித்தல் போன்ற சவால்களை சமாளிக்க முதலீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.



விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா, சுவரொட்டி வழங்குதல், மீம் உருவாக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி, வேளாண்பொறியியல் முதன்மையர் முனைவர் A. ரவிராஜ், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் N. மரகதம், மற்றும் பேராசிரியர் முனைவர் M. பாலகிருஷ்ணன் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

உணவுப்பதப்படுத்துதல் துறைத்தலைவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உணவு இழப்பு மற்றும் கழிவுத்தடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழிப்புணர்வு பேரணியில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் தாக்கத்தை குறைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இந்த பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாணவர்களை ஊக்குவித்தது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...