கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை அக்டோபர் 3 அன்று ஆய்வு செய்தார். இக்கட்டிடத்தை விரைவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் இன்று (அக்டோபர் 3) ஆய்வு செய்தார்.



இந்த புதிய கட்டிடம் பணி நிறைவுற்று, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் திறப்பு விழா காணவுள்ளது. இந்த ஆய்வின் போது, கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி உடனிருந்தார்.



இந்நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.கார்த்திக், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ.மு.தியாகராஜன், ஐடி விங் நிர்வாகிகள் சஹா விக்னேஷ், எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கட்டிடம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்று நம்பப்படுகிறது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...