கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர். இந்த நடவடிக்கை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

கோவை, ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்திருப்பதால், ரோட்டின் அகலம் சுருங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நெடுநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழித்தடமாக, அருகாமையில் உள்ள ஒலம்பஸ் 80 அடி ரோட்டை உருவாக்க மாநகராட்சி முடிவெடுத்தது.

மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த் பிரபாகர் தலைமையில் நகரமைப்பு பிரிவினர், 80 அடி ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரோட்டின் ஒரு புறம், 70 கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த ஷெட்கள், மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் அடுப்புகள் ஆகியவை அகற்றப்பட்டன.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், "80 அடி ரோட்டில் இருந்து 100 ரோட்டுக்குச் செல்ல இணைப்பு சாலை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இச்சாலை உருவானால் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து 100 ரோட்டில் வந்து, 80 அடி ரோடு வழியாக திருச்சி ரோட்டை அடையலாம். இதனால் நஞ்சுண்டாபுரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது" என்று தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...