டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்கும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

கோவையில் புதிய சுகாதார நிலையங்கள் திறப்பு. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் தான் டெங்கு இறப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டார்.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற சமுதாய நல மையத்தினையும், தாளியூரில் ரூ.58.10 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதார அலகு கட்டடங்களையும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மொத்தமாக ரூ.2.08 கோடி மதிப்புடைய புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், GKNM தனியார் மருத்துவமனையிலும் புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதார துறையில் ஏற்கனவே இருக்கின்ற பழைய கட்டிடத்திற்கு கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்படுகின்றது எனவும், அந்த இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியதுடன், மருத்துவதுறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்தாளுநர்கள் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுகின்றது எனவும் விரைவில் 2253 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர், இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார்.

1066 சுகாதார ஆய்வாளர் நியமனம் குறித்து 38 பேர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கின்றனர் எனவும், இந்த வழக்கு போட்டவர்களை அழைத்து பேசி வருகின்றோம் எனவும் காலியாக இருந்த 14 மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பணிநியமனம் நேற்று செய்யப்பட்டு இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் எங்கும் மருந்து தட்டிப்பாடு இல்லை ,13 வகையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது எனவும் தெரிவித்தார். சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் வரும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய முடியாது எனவும் Mrb தேர்வுகள் மூலம் உரிய தகுதி அடிப்படையில் முறையாக வந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறிய அவர், அரசு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அது தொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

தொற்று நோய்கள் பரவாமல் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பில்லாத வகையில் இஉக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற 15 ம் தேதிக்கு பின்பு தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும் எனவும் டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில்தான் அதிகம் எனவும் அதிமுக ஆட்சியில் கடந்த 2012ல் டெங்கு இறப்பு 66 பேர், 2017 ல் 65 பேர் எனவும் சுட்டிக்காட்டிய மா.சுப்பிரமணியன், தமிழக வரலாற்றில் அதிகப்படியான டெங்கு இழப்புகள் இதுதான் எனவும் இந்த ஆண்டில் டெங்கு காரணமாக ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் அதுவும் தனியார் மருத்துவமனை முறையான சிகிச்சை இல்லாதது, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது போன்ற காரணத்தால் உயிரிழப்பு எனவும் குறிப்பிட்டார். டெங்கு பாதிப்பு எங்கேயுமே இல்லை எனவும் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...