கோவை வடக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற உதவிய கழக நிர்வாகிகள், கட்சி தோழர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.



Coimbatore: கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த கழக நிர்வாகிகளுக்கும் அனைத்துக் கட்சி தோழமைகளுக்கும் மற்றும் வாக்காளர் பெருமக்களுக்கும் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் இன்று (அக்டோபர் 4) நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் தொ. ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் அசோக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சரத் விக்னேஷ், துடியலூர் பகுதி செயலாளர் அருள் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.



கோவை எம்பி கணபதி ராஜ்குமார் தனது நன்றியுரையில், "வடக்கு சட்டமன்ற தொகுதியின் மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல, நம் அனைவரின் கூட்டு முயற்சியின் வெற்றியாகும். இந்த நம்பிக்கைக்கு ஏற்ப நான் தொடர்ந்து உழைப்பேன்" என்று தெரிவித்தார்.



மேலும், வரும் காலங்களில் வடக்கு தொகுதியின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், மக்களின் குறைகளை களைய தொடர்ந்து பாடுபடுவதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்பியின் உரையை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...