நீட் தேர்வில் மாணவர்கள் தடுமாற்றத்திற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்- தமிழிசை சவுந்திரராசன்

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது நீட் தேர்வில் ஆரம்ப கால சிரமங்களை தவிர்க்க மாணவர்களின் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்த்து மதிப்பீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

நீட் தேர்வில் மாணவர்கள் தடுமாற்றத்திற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணமென குற்றம்சாட்டிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்தாமல் பிரச்சனையை அரசியலாக்கி மாணவர்களை குழப்பி இருப்பதாக தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் நீட் எதிர்ப்பு கூட்டங்களை திமுக நடத்துவதற்கு பதிலடியாக, அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு பாஜக சார்பில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமென தெரிவித்தார்.

மேலும், சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் பெயர் இருப்பது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, தலைமை செயலகத்திற்கே சென்று நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை இதற்கும் நடவடிக்கை எடுக்கும் என பதிலளித்தார்.

மேலும், பாஜக ஆட்சியில் குற்றம் செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்பதை சமீப கால நடவடிக்கை தெளிவு படுத்துவதாகவும், சந்தேகம் இருப்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி கட்சிசார்பின்றி அனைவரிடமும் பழகியவர் எனவும், அவரை ஒருசார் அரசியல்வாதியாக சுருக்க முயற்சிகள் நடப்பதாகவும், கருணாநிதி வைரவிழாவை வருங்கால கூட்டணி மற்றும் அரசியல் இலாபத்திற்காக நடத்துவதாகவும் கூறிய தமிழிசை சவுந்திரராசன், அவ்விழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டுமென தெரிவித்தார்.

இந்தி எங்கும் திணிக்கப்படவில்லை எனவும், செயற்கை இந்தி எதிர்ப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். சட்டமன்ற உறுப்பினர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாக ஒரு கோவை எம்.எல்.ஏ கூறியிருப்பதாகவும் தெரிவித்த அவர், கொத்தடிமைகளாக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் போல் செயலாற்றினால் ஆட்சி தொடரலாம் என தமிழிசை கூறினார். தற்போதைய ஆட்சி தொடர்வது என்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கையில் தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...