சிறுவாணி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் ஐயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இராஜேந்திரன் (35). இவர் இன்று தனது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) மற்றும்  10 வயது மகள் தீக்ஷா ஆகியோருடன் சிறுவாணி சாலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். 



அப்போது, ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அருகே '14 ஏ' எண் கொண்ட காந்திபுரம்- செம்மேடு அரசு பேருந்து வந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அப்பேருந்து இராஜேந்திரன் குடும்பத்தினர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்தில் இராஜேந்திரன், அவரது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி தீக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தோரின் பிரேதங்களை மீட்டனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...