சிறுவாணி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் ஐயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இராஜேந்திரன் (35). இவர் இன்று தனது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) மற்றும்  10 வயது மகள் தீக்ஷா ஆகியோருடன் சிறுவாணி சாலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். 



அப்போது, ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அருகே '14 ஏ' எண் கொண்ட காந்திபுரம்- செம்மேடு அரசு பேருந்து வந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அப்பேருந்து இராஜேந்திரன் குடும்பத்தினர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்தில் இராஜேந்திரன், அவரது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி தீக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தோரின் பிரேதங்களை மீட்டனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...