பில்லூர் மூன்றாம் திட்ட பராமரிப்பு: கோவையில் குடிநீர் விநியோக தடை - ஆணையாளர் அறிவிப்பு

பில்லூர் மூன்றாம் திட்டத்தில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல பகுதிகளில் அக்டோபர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று தெரிவித்துள்ளார்.


பவானி ஆற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மருதூர் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உள்கட்டமைப்புகளுக்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் அக்டோபர் 8 அன்று காலை முதல் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக அன்று மின் விநியோகம் தடைபடும்.


இதனால், அக்டோபர் 8 அன்று காலை 6 மணி முதல் மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் மூன்றாம் திட்டத்தின் கீழ் குடிநீர் பெறும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். மேலும், அக்டோபர் 9 அன்று பில்லூர் மூன்றாம் திட்டத்தின் உள்கட்டமைப்புகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களிலும் குடிநீர் விநியோகம் தடைபடும்.


குடிநீர் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

- துடியலூர்

- வெள்ளக்கிணறு

- சின்னவேடம்பட்டி

- காளப்பட்டி

- விளாங்குறிச்சி

- கவுண்டம்பாளையம்

- வடவள்ளி குறிச்சி

- குனியமுத்தூர்


இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...